மதுரை: பாலியல் புகாரில் சிக்கிய அமமுக பெரியகுளம் தொகுதி வேட்பாளர் கதிர்காமுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்பிணை வழங்கி உள்ளது. கதிர்காமு மருந்தகத்துக்குச் சிகிச்சைக்காக தான் சென்றபோது அவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து கதிர்காமு மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலிஸ் வழக்குப்பதிந்தது. பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் கதிர்காமு எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் கதிர்காமு தனக்கு முன்பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
பாலியல் புகாரில் சிக்கிய வேட்பாளருக்கு முன்பிணை
1 mins read

