மூன்று மாநிலங்களில் கனமழை, புழுதிப் புயலால் 35 பேர் பலி

மூன்று மாநிலங்களில் கனமழை, புழுதிப் புயலால் 35 பேர் பலி

1 mins read

புதுடெல்லி: ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் உள் ளிட்ட மூன்று மாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். வழக்கத்துக்கு மாறாக இந்த கனமழை, புழுதிப் புயல் காரணமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத், ராஜஸ்தானில் பத்து பேரும் மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும் பலியாகினர்.