வால்பாறை: வால்பாறையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் களும் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று தேர்தலில் வாக்களிப்பதற்காக பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்வதற்கு வந்தனர். ஆனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்ல சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்பட வில்லை. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாக்களிக்க பயணிகள் பெரும் அவதி
1 mins read

