பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் 16 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆடவர்கள், அவர் மீது அமிலத்தை வீசினர்.
பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பதின்ம வயது பெண்ணின் வீட்டிற்குள் நான்கு ஆடவர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அந்த வீட்டில் அந்த இளம் பெண்ணும் அவரது தாயாரும் இருந்தனர்.
பெண்ணின் தாயாரிடம் துப்பாக்கியைக் காட்டி அந்த ஆடவர்கள் மிரட்டினர்.
அதையடுத்து, அந்த இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய அந்த ஆடவர்கள் முயன்றனர். இளம் பெண் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடவர்கள் ஆத்திரமடைந்தனர்.
தங்கள் ஆசைக்கு இணங்காத அப்பெண்ணைத் தண்டிக்கும் வகையில் அவர் மீது அமிலத்தை வீசினர்.
இதன் காரணமாக அந்த இளம் பெண் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் தொடர்பாக பீகார் போலிசார் விசாரணை நடத்தினர். இதுவரை இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை முயற்சி: இளம் பெண் மீது அமிலம் வீச்சு
22 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!