ரஃபேல் விமான விவகாரம்; வருத்தம் தெரிவித்த ராகுல்

இந்தியப் பிரதமர் மோடி ஒரு திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாக முன்னர் கூறியிருந்த ராகுல் காந்தி தமது கூற்று தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தாம் அவ்வாறு கூறியிருந்ததாகத் திரு ராகுல் தெரிவித்தார்.

இதை தாம் வேண்டுமென்று கூறியதாக எதிராளிகள் கருதுவது தவறு என்றும் திரு ராகுல் தெரிவித்தார். மேலும், "காவலாளி திருடிவிட்டான்" என்று நீதிமன்றம் எவரையும் வர்ணிக்காது என்பது அனைவரும் அறிந்ததே என்றும் திரு ராகுல் கூறினார்.

திரு ராகுல் இரு வாரங்களுக்கு முன்பு இந்தக் கருத்தைக் கூறியது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தது. அத்துடன் பாரதிய ஜனதா கட்சி இது குறித்து அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. இந்த மனுவை நீதிமன்றம் நாளை பரிசீலிக்கும்.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் ரஃபேல் விமான நீதிமன்ற வழக்கில் சாட்சியங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் திரு ராகுல் அவ்வாறு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!