'மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்'

'மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்'

1 mins read

கயேஷ்பூர்: மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட் பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும் முதல் வருமான மம்தா பானர்ஜி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதா வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி வருகிறார். நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கயேஷ்பூரில் நேற்று முன்தினம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பா.ஜனதாவோ, காங்கிரசோ புதிய அரசை அமைக்கப்போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்போம்," என்றார்.