கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங்கை வேட்பாளராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி.
பாரதிய ஜனதா கட்சியின் ரமேஷ் பிதுரியையும் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதாவையும் எதிர்த்து சிங் போட்டியிடுகிறார்.
தமது அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் அவர் டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். ஹர்யானா மாநிலத்தின் காவல்துறையில் பணிபுரிந்து வந்த சிங், தமது வேலையிலிருந்து விலகியுள்ளார்.
ஏழு நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ள டெல்லியில் மே 12ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும். அதன் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்.