நான்கு தொகுதி­க­ளில் அதிமுக, திமுகவுக்கு இமாலய சோதனை; கூட்டணிக்­ கட்சிகள் பாராமு­கம்

நான்கு தொகுதி­க­ளில் அதிமுக, திமுகவுக்கு இமாலய சோதனை; கூட்டணிக்­ கட்சிகள் பாராமு­கம்

2 mins read

சென்னை: தமிழ­கத்தைப்­ பொறுத்த வரை நாடாளு­மன்­றத் தேர்தலைவிட சட்ட­மன்ற இடைத்தேர்தல்­களை முக்­கிய­மானவையாகக்­ கருதி செயல்பட்டு­வரும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு முக்­கிய கட்சி க­ளும் நடக்கவி­ருக்­கும் நான்கு தொகுதி இடைத்தேர்த­லில் தர்ம சங்கட­மான நிலையை எதிர் நோக்­குவதாகக்­ கூறப்­படுகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்­ குறிச்சி, ஓட்டப்­பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதி­க­ளில் மே 19ஆம் தேதி நடக்­கும் இடைத்­ தேர்த­லில் திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி போட்டியி­டும் என்று தெரிகிறது.

அந்த நான்கு தொகுதிகளி­லும் கூட்டணிக்­ கட்சி­க­ளுக்கு இடம் கொடுக்காமல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் இவற்­றின் ஆதரவுக்­ கட்சிகள் கண்­டும் காணாமல் பாராமுகமாக ஒதுங்கி வருவதாக பேச்சு கிளம்பியுள்­ளது.

இந்த நான்கு தொகுதி­க­ளில் போட்டியி­டும் திமுக வேட்­பாளர் க­ளுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் போதிய ஒத்­துழைப்பு அளிக்க வில்லை என்­றும் இதனால் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அதிருப்­ தியில் இருப்பதாக­வும் இந்த விவ காரத்தை காங்கிரஸ் மேலி­டத்துக்­ குக் கொண்டுசெல்ல அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக­வும் தக வல்கள் கசிந்­து­ள்னன.

காங்கிரஸ் கட்சியி­னர் ஒத்து ழைப்­புத்­ தராமல் போவதோடு நிறுத்­திக்­கொள்ளாமல் தினகர னின் அமமுக கட்சி வேட்­பாளர் க­ளுக்கு ஆதரவு அளிக்கக்கூ­டும் என்ற சந்தேக­மும் தங்­க­ளுக்கு ஏற்பட்டு இருப்பதாக திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்­துள்­ளன.

இதனிடையே, இந்த இடைத்­ தேர்தல் ஆளும் அதிமுகவுக்­குப்­ பெரும் பிரச்­சினையாக இருக்கு மென அந்தக்­ கட்சியினரே கூறு கிறார்கள். ஆட்சி நீடிக்க வேண்டு மானால் இந்த இடைத்தேர்த­லில் அதிமுக குறிப்­பி­டத்தக்க வெற்றி­ பெற்றாகவேண்­டும் என்ற அவ சியம் ஏற்பட்டு இருக்­கிறது.

அதிமுக அணி­யில் இடம்பெற்று இருக்­கும் பல கட்சி­க­ளும் இந்த இடைத்தேர்த­லில் ஒருமித்த கவ னத்தைச்­ செலுத்தி அதிமுகவிற்கு ஆதரவு திரட்டாமல் மெத்­தனப்­ போக்­கு­டன் இருப்பதாக ஆளும் கட்சியி­னர் கூறுகி­றார்கள்.

கூட்டணிக்­ கட்சிகள் இப்­போது மும்முர­மான ஆதரவை அதிமுக வுக்­குத்­ தருமா? அல்லது இந்த இடைத்தேர்த­லில் தங்­க­ளுக்கு எந்த லாப­மும் இல்லை என்று அந்தக்­ கட்சிகள் ஒதுங்கிவிடுமா? என்று அதிமுக தலை­வர்கள் சந் தேகப்­படுவதா­கத் தெரிகிறது.