சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் குரல் உலக அரங்கில் ஒலிக்கவில்லை என்றும் தற்போது இந்தியாவின் குரலுக்கு மதிப்புள்ளது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள்தான் இத்தகைய மாற்றத்துக்குக் கார ணம் என்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் ஒப்புக் கொண்ட தற்கும் தமது வெளிநாட்டுப் பய ணங்களே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இந்தியாவில் இருப் பதே இல்லை, விமானத்தில் சுற்றி யபடியே உள்ளார் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் விமர்சனத்துக்கு மோடி தமது பேச்சின் மூலம் பதிலடி கொடுத்தார்.
"மக்களவைத் தேர்தலில் 20 முதல் 25 தொகுதிகளில் போட்டி யிடும் கட்சித் தலைவர்கள் கூட இந்நாட்டின் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
"தேநீர் விற்றவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தார் என்று மேற்கு வங்க முதல்வர் விமர்சிக் கிறார்.
"தற்போது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த பிறகு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் சூரியன் மறையப் போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன," என்றார் பிரதமர் மோடி.
மம்தாவை தமது உரையில், 'தீதி' என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு இந்தியில் மூத்த சகோதரி என்று அர்த்தமாகும்.
தீதியிடம் குண்டர்கள் பலம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களிடம் ஜனநாயகம் என்ற பலம் இருப்பதாகக் கூறினார்.
தேர்தல் நியாயமான முறையில் நடக்கிறது என்பதால் தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி கோபமாக இருப்பதாகவும் மக் களவைத் தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்தும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிப் பதாகவும் பிரதமர் மோடி தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

