புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் நீதிபதிகள் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
அவரது இம்முடிவை வரவேற் பதாக தலைமை நீதிபதி மீது புகார் தெரிவித்துள்ள பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரிடம் உதவியாளராகப் பணி யாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று நீதி பதிகள் கொண்ட குழு அமைக்கப் பட்டது. எனினும் அக்குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி ரமணா, தலைமை நீதிபதியின் குடும்ப நண்பரைப் போன்றவர் என்பதால் அவர் விசாரணைக் குழுவில் இடம்பெறக்கூடாது என புகார் எழுப்பிய பெண்மணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணைக் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
இதற்கிடையே, பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப் படுத்த முடியாது என உச்சநீதி மன்றம் காட்டமாக தெரிவித் துள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டு களாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக கடுமையான முடிவு எடுக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.
தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இத்தகைய கருத்தை வெளிப் படுத்தியுள்ளது.

