லக்னோ: ஐந்து கோடி குடும் பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.72,000 நிதி உதவி வழங்கு வதாக அளிக்கப்பட்ட வாக்குறு தியை காங்கிரஸ் கட்சி என்ன விலை கொடுத்தாவது நிறைவேற் றும் என அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயத் திற்கென தனியாக வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய் யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது ரூ.20 ஆயிரம் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால்கூட விவசாயிகள் சிறையில் தள்ளப்படுவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"விவசாயத்திற்கென தயாரிக் கப்படும் பட்ஜெட் இத்தகைய அராஜகங்கள் அனைத்துக்கும் நிச்சயம் ஒரு முடிவு கட்டும். விவ சாயிகள் கௌரவமான முறையில் வாழ வழி ஏற்படுத்தித் தரும்.
"காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பொது பட்ஜெட்டும் விவசாயத் திற்குத் தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்," என்றார் ராகுல் காந்தி.
ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பிரதமர் மோடி ஏழைகளை ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டைப் பெரிதும் பாதித்துள்ள தாகக் கூறினார்.
"நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. காவலாளி ஒரு திருடன் என்று குஜராத் மக்கள் கூட கூறத் தொடங்கிவிட்டனர்," என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்தார்.