ஹைதராபாத்: பெண்கள் நால்வர் உட்பட எழுவர் அடங்கிய குழந்தைக் கடத்தல் கும்பலை ஹைதராபாத் போலிசார் கைது செய்து உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இரு மாநில போலிசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில் இந்தக் கும்பல் சிக்கியது. இவர்கள் இரண்டரை வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கடத்தி, ரூ.3 லட்சம் வரை விலை பேசி, குழந்தையில்லாத் தம்பதியரிடம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணை தொடர்கிறது.
குழந்தைகளைக் கடத்தி விற்ற எழுவர் கும்பல் பிடிபட்டது
1 mins read

