கோளாறு; ராகுல் பறந்த விமானம் திரும்பியது

கோளாறு; ராகுல் பறந்த விமானம் திரும்பியது

1 mins read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித்­ தலை­வர் ராகுல் காந்தி பறந்த விமானத்­தில் கோளாறு ஏற்பட்ட தால் மீண்­டும் டெல்லிக்­குத்­ திரும்பியது.

நாடாளு­மன்­றத் தேர்தலை யொட்டி நாடு முழுவ­தும் ராகுல் காந்தி சுற்றுப்­ பயணம் மேற் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகி­றார்.

இந்த நிலை­யில் பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசா­வின் பலசோர், மகாராஷ்டிரா­வின் சங்­கம்­னர் ஆகிய இடங்­க­ளில் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்ய முடிவு செய்­தார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியிலிருந்து பாட்னா விற்கு விமானத்­தில் புறப்பட்­டார். அவரு­டன் கட்சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளும் சென்ற­னர்.

ஆனால் விமானத்­தின் இயந் திரத்­தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்­டும் டெல்லிக்கு தி­ரும்பியது.

இந்­தத் தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்­கத்­தில் பதிவு செய்துள்­ளார்.

சமஸ்திபூர், பலசோர், சங்­கம்­னர் ஆகிய இடங்­க­ளில் பிரசாரம் பின்­னர் நடைபெ­றும் என்று அவர் கூறியுள்­ளார்.