மம்தா: இனிப்பு உண்டு, வாக்கு இல்லை

மம்தா: இனிப்பு உண்டு, வாக்கு இல்லை

1 mins read

புதுடெல்லி: நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த பேட்டி­யில் எதிர்­க்­கட்சித்­ தலை­வர்­க­ளு­டன் உள்ள நட்பு கு­றித்து பிரதமர் மோடி பேசி­னார். அப்­போது மேற்கு வங்காள முதல்­வர் மம்தா பானர்ஜி, ஒவ் வொரு ஆண்­டும் தனக்கு குர்தா மற்­றும் இனிப்­பு­களை அனுப்­பு­வார் என்று திரு மோடி கூறியிருந்தார். இந்த நிலை­யில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்­துக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்­துள்­ளார். ஹுக்ளி பகுதி­யில் தேர்தல் பிரசா­ரத்­தில் பங்கேற்றுப்­ பேசிய மம்தா, "விருந்தி­னர் க­ளுக்கு இனிப்­புகள், பரிசுப்­ பொருட்கள் கொடுத்து வரவேற்பது மேற்கு வங்கா­ளத்­தின் கலாசாரம். ஆனால் மோடி­யின் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாக்­குக்­ கூட போட மாட்டோம்" என்­றார். மம்தா­வின் இந்தக்­ கருத்து பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்­படுத்­தியிருக்­கிறது.