'பிஎம் நரேந்திரமோடி' படத்துக்­கு விதி­க்­கப்பட்ட தடை நீட்டிப்­பு

'பிஎம் நரேந்திரமோடி' படத்துக்­கு விதி­க்­கப்பட்ட தடை நீட்டிப்­பு

1 mins read

புதுடெல்லி: 'பிஎம். நரேந்திர மோடி' திரைப்படம் வெளியிடு வதற்கு தேர்தல் ஆணையம் தரப்­பில் எதிர்ப்பு தெரிவித்­தது. தேர்தல் முடி­யும் வரை திரையிடக்கூடாது என்­றும் ஆணை யம் உத்தரவிட்டது. இந்த நிலை­யில் திரைப்ப­டத்­தின் தயாரிப்பாளர்கள் இதனை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்முறையீடு செய்த­னர். மேலும் திரைப்ப­டத்­தில் அரசியல் பிரசாரம் கிடையாது என்­றும் உத்வே­கம் அளிக்­கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்­ளன என்­றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்­தனர்.

இதை­யடுத்து உச்ச நீதி­மன்றம் பிரதமர் மோடி­யின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணை­யத்­திற்கு திரையிட்டுக்­ காட்ட வேண்­டும் என்­றும் அதன் பிறகு ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்­டும் என்­றும் உச்ச நீதி­மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலை­யில் இந்­தத் திரைப்ப­டத்தை பார்த்த பிறகு தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி உச்ச நீதி­மன்­றத்­தில் அறிக்கை ஒன்றைத்­ தாக்கல் செய்­தது. இந்த வழக்கு நேற்று மீண்­டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணை­யத்­தின் முடி­வில் தலையிட முடியாது என்று உச்ச நீதி­மன்றம் தீர்ப்பளித்­தது. இதனால் 'பிஎம். நரேந்திர மோடி' படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நீடிக்­கிறது.