வாரணாசி: வாரணாசி தொகுதி யில் வேட்புமனுத் தாக்கல் செய் வதற்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, முதல் முறையாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அலை வீசு கிறது என்று கூறியுள்ளார்.
"மோடி அரசாங்கம்தான் மீண் டும் வேண்டும் என்பதை மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட் டனர்.
"கட்சி ஊழியர்கள்தான் உண் மையான வேட்பாளர்கள். காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரி வரை வழக்கத்திற்கு மாறாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அலை வீசு கிறது.
"இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத சாதனைகளை கட்சித் தொண்டர்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும்," என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
"தேர்தல் பிரசாரத்தின்போது ஆணவத்தோடு நடந்துகொள்ளா தீர்கள்.
"ஆணவத்தோடு நடந்து கொண்டவர்களுக்கு 400 தொகு தியிலிருந்து 40க்கு குறைந்து விட்டது," என்று மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை அவர் சுட்டிக் காட்டினார்.
வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய பிரதமர் மோடி புறப்பட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணா சியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்தத் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள பிரதமர் மோடி நேற்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.
இதற்கிடையே வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங் கிரஸ் பொதுச் செயலாளரும் அக் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் காங் கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் களம் காண்கிறார்.

