புதுடெல்லி: உத்தரகாண்ட் முன் னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மனை வியை 14 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள் ளது.
கடந்த 16ஆம் தேதி டெல்லியில் ரோகித் சேகர் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப் பது தெரிய வந்தது. இதனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். இதில் ரோகித் சேகர் மனைவி அபூர்வா மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரோகித்தின் மனைவி அபூர்வா, உறவினர் களிடம் போலிசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ரோகித் தின் தாயார் உஜ்வாலா காவல் துறையிடம் சில தகவல் களைத் தெரிவித்தார். இதை அடிப்படையாக வைத்து மருமகள் அபூர்வாவிடம் போலிசார் விசாரித் தனர். இந்த விசாரணையில் அபூர்வா முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையி னருக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அபூர்வா கைது செய்யப்பட்டு இரண்டு நாள் விசாரணைக் காவலில் வைக்கப் பட்டார். இதற்கிடையே டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி மீண்டும் நேற்று முன்னி லைப்படுத்தப்பட்டார். விசாரணை முடியாததால் அபூர்வா திவாரியை 14 நாள் காவலில் வைக்க நீதி பதிகள் அனுமதி வழங்கினர்.

