மும்பை: வங்கியில் பெருமளவில் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நீரவ் மோடி, மெகுல் சோக்சியின் சொகுசு கார்கள் ஏலம் விடப்படுகின்றன.
அரசின் எம்எஸ்டிசி நிறுவனம் இதற்கான அறிவிப்பை இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.
காரின் ரகம், விலை போன்ற விவரங்கள் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிக விலையை பதிவு செய்ப வர்களுக்கு அந்த கார்கள் ஏலத் தின் மூலம் விற்கப்படும்.
மொத்தம் 13 சொகுசு கார்கள் மூலம் ரூ.3.29 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் வரு மான வரித்துறைக்கு ரூ.54 கோடி கிடைத்தது. அடுத்த கட்டமாக நீரவ் மோடியின் சொகுசு பங்க ளாக்கள் ஏலம் விடப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களான நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர்.
இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13,570 கோடி வரை கடன் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்கள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களையும் அம லாக்கத்துறையினர் முடக்கியுள் ளனர்.

