பொய்களை மட்டுமே பேசி வருகிறார் மோடி என்கிறார் ராகுல்

பொய்களை மட்டுமே பேசி வருகிறார் மோடி என்கிறார் ராகுல்

1 mins read

கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக் காணப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார். நாட்டில் உள்ள இளையர்களில் யாரேனும் ஒருவராவது காவலாளி மோடி தமக்கு வேலைவாய்ப்பைத் தந்தார் என்று சொல்ல முன்வரு வார்களா? என்று உத்தரப்பிரதேசத் தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார். "கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பர்சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது. "ஆனால் பிரதமர் மோடியோ கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்," என்றார் ராகுல்.