புதுடெல்லி: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதப் பொருட்கள், இருசக்கர வாகனங்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரியை வசூலிக்கிறார்கள். இனி அமெரிக்காவுக்கு பலன் கிடைக்கும் வகையில் தான் வர்த்தக உறவுகள் இருக்கும். மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவில் மாற்றம் செய்யப்படும்," என்றார் அதிபர் டிரம்ப்.