ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. ஆயினும் இந்தத் தாக்குதலில் எவரும் காயமடையவில்லை.
இந்தியப் பொதுத்தேர்தலின் ஐந்தாவது கட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 51 தொகுதிகளுக்கான இத்தேர்தலுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அனந்தநகர் நாடாளுமன்ற இடத்திற்காகப் போட்டியிடவிருந்த பாஜக வேட்பாளர் குலாம் முகம்மது மீர், 55, நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் தமது வீட்டுக்குள்ளேயே சுடப்பட்டார். இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்.