ஹைதராபாத்: ஆந்திராவில் கத்திரி வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இரு தினங்களில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் தெலுங்கானாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரு மாநிலங்களிலும் காலை 8 மணி முதலே வெயில் தகிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பிரகாசம், சித்தூர் மாவட்டங்களில் மிக அதிக அளவு வெயில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மட்டும் ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் வெயில் கொடுமை தாளாமல் உயிரிழந்துள்ளனர்.