விஷவாயு தாக்கி மூவர் மரணம்

விஷவாயு தாக்கி மூவர் மரணம்

1 mins read

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திலுள்ள தோகாலி குடியிருப்புப் பகுதியில் நேற்று அதிகாலை கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மயக்கம் அடைந்த ஐந்து தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர்.