ரஃபேல் வழக்கு ஒத்திவைப்பு

ரஃபேல் வழக்கு ஒத்திவைப்பு

1 mins read

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறைகளில் முறை கேடு நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து யஷ்வந்த் சின் ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் உச்ச நீதிமன் றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக் கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட் டறிந்த நீதிபதிகள், சீராய்வு மனுக் கள் மீதான தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் ஒத்திவைத்தனர்.