புதுடெல்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதி விட்டுள்ளார்.
பிரதமர் மோடி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டில் மரியாதையான மாற்றம் நிகழ இதுவே சரியான நேரம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

