புவனேஸ்வர்: பானி புயலின் கோரத்தாண்டவத்தால் புவனேஸ்வர் நகரில் மட்டும் சுமார் 10 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடந்த 3ஆம் தேதி இப்புயல் ஒடிசாவைத் தாக்கியது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், உயிர்ச்சேதம் அதிகளவில் இல்லை. எனினும் புயலின் போது வீசிய சூறைக்காற்றால் கடலோரப் பகுதிகள் கடும் சேதங்களைச் சந்தித்தன. புவனேஸ்வரில் மட்டும் 10 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

