தள்ளுபடியில் அசத்தும் ஏர் இந்தியா

புதுடெல்லி: விமானப் பயணிக ளுக்கு மிகப்பெரும் தள்ளுபடி விலையில் பயணச்சீட்டுகளை விற்கப் போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசி தருணத்தில் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு இந்தச் சலுகை பெரிதும் கைகொடுக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மே 10ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனம் முன்பே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் பயணச்சீட்டுகளை வாங்குபவர்க ளுக்கு ஏர் இந்தியா 50 விழுக்காடு அளவுக்கு தள்ளுபடி அளிக்க இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் ஏர் இந்தியா தரப்பில் எவ்வளவு விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்பதை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அவசர விவகாரங்களுக்காக கடைசி நேரத்தில் விமானச்சீட்டு பெறுபவர்கள் வழக்கமான விலையை விட 40 விழுக்காடு அளவுக்கு அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கி இருப்பதால், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களும், வெளிநாடு களில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களும் விமானப் பயணச் சீட்டுக்காக அதிக தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத் துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!