திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த லதா, மனநலம் பாதிக்கப்பட்டவர். கணவர் கைவிட்ட நிலையில், இவரை கடந்த 20 ஆண்டுகளாக தன் வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தார் இவரது சகோதரி. லதாவுக்கு தின மும் ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளது.
இவரது மகன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். இதுபற்றி தகவலறிந்த பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் லதாவை மீட்டுள்ளனர். அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.