இந்தியப் பொதுத்தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆயினும், அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி அடையும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் முன்னு ரைத்துள்ளன. ஏழு கட்டங்களாக நடந்த இந்தப் பொதுத்தேர்தலில் 900 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளனர்.
இந்த எண்ணிக்கை, ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக் கையைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகம். கருத்துக்கணிப்புகள் வெளி வந்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. அத்துடன் இந்தியாவின் நாணய மதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் மே 23 ஆம் தேதி வாக்குகள் எண் ணப்படும் வரை எதுவும் உறுதி யில்லை. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் கருத்துக் கணிப்புகளுக்கு முரணாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.