இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்தலில் அடைந்த வெற்றிக்கு வாழ்த்து கூறுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவரும் முன்னரே இதனைக் கூறிய திருவாட்டி சுஷ்மா, இந்திய மக்களுக்கு நன்றி கூறுவதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
புதுடெல்லியிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சி தலைமையகத்தில் அந்தக் கட்சியின் முன்னிலையை தொலைக்காட்சி ஒளிவழிகள் அறிவித்துக்கொண்டிருக்கையில் கட்சி உற்சாகமடைந்த ஊழியர்கள் தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.
கடந்த டிசம்பரில் பாஜக மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்களில் தோற்றதை அடுத்து மோடி மீதான நெருக்குல் கூடியது. ஆயினும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை மோதலை ஒட்டி திரு மோடி மேற்கொண்ட பிரசாரங்களால் அவர் மீதான மக்கள் அபிமானம் அதிகரித்ததாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.