அமராவதி: ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் முழு மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டுக்குள் ஆந்திராவை முன்னணி மாநிலமாக மாற்ற உறுதிபூண்டுள்ள ஜெகன் மோகன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். கடைகளைக் குறைப்பது, விலையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் புதிய கொள்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

