டெல்லி நகரிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், ஜெர்மனிக்குப் புறப்படவிருந்த ஓர் ஆடவரின் பயணப் பெட்டியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'எல்எச்-761' சேவை எண் கொண்ட விமானத்தின் பயணியான அந்த இந்திய ஆடவரின் பெட்டிக்குள் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததை விமான நிலையத்தின் இயந்திர வருடிகள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவரை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.
டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்கள் வைத்திருந்த ஆடவர் கைது
1 mins read
-

