புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகளில் பண மோசடி கடந்த நிதி ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பதில் அளித்த வங்கி, 2018-19 நிதியாண்டில் வங்கி பண மோசடி தொடர்பில் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியது. மொத்தம் ரூ.71,500 கோடி மோசடி செய்யப்பட்டது.
கடந்த 2017-2018 நிதியாண்டில் 5,916 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த நிதியாண்டில் 41,167 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.