தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாத அச்சுறுத்தல், திருட்டு: முக்கிய ரயில்நிலையங்களில் அதிகரிக்கும் பாதுகாப்பு

2 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்க ளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட உள்ளன.

மும்பை, டெல்லி, வாரணாசி, லக்னோ, கௌகாத்தி போன்ற ரயில் நிலையங்களுக்கு பயங் கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளது.

எனவே பாதுகாப்பை அதிகரிப் பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரயில்வே போலிஸ் படையின் பாதுகாப்புப் பிரிவு தலைமை அதிகாரி அருண்குமார் தெரிவித்து உள்ளார்.

'ஐஏஎன்எஸ்' செய்தி நிறு வனத்திடம் அவர் கூறுகையில், "இப்போதுள்ள பெரிய ரயில் நிலை யங்களில்கூட பாதுகாப்பு ஏற்பாடு கள் பலவீனமாக உள்ளன. ரயில் நிலையங்கள் திறந்த நிலையில் பலவழிகளைக் கொண்டதாக உள்ளன. யார் வேண்டுமானாலும் எப்பகுதியில் இருந்தும் ரயில் நிலையத்திற்குள் எளிதாக நுழைந்துவிடலாம்.

"பயங்கரவாதத் தாக்குதலுக்கு இடம் கொடுக்கும் வகையில் இவை அமைந்துள்ளன. எனவே எல்லா வழிகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு நுழைவு வழி மட்டும் இருக்கும் வகையில் பெரும்பாலான முக்கிய ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப் படும். ரயில் நிலையங்களுக்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.

"நுழைவு வாயில் 'ஸ்கேனிங்' முறை மேம்படுத்தப்படும். அதிரடி படை வீரர்கள் ரயில் நிலையங் களைச் சுற்றி வருவார்கள். இந்த பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே 114.18 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

"இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிர்களை மட்டு மல்ல உடைமைகளையும் பாது காக்க முடியும். குறிப்பாக, ரயில்வே துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வரும் திருட்டை கட்டுப்படுத்த முடியும்," என்றார் அருண்குமார்.