புதுடெல்லி: இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகளில் 8.5 விழுக்காட்டு குழந்தைகள் 5 வயதை அடைவதற்குள் காற்று மாசால் இறந்துபோவது அண்மைய ஆய் வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்திகரமாக இல்லை என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘சென்டர் ஃபார் சைன்ஸ் அன்ட் என்விரோன்மென்ட்’ என்ற தனியார் அமைப்பு சுற்றுச்சூழல் நிலை குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்து புள்ளிவிவரங்க ளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் இறந்து போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் காற்று மாசுபாடு காரணமாக மட்டும் 12.5 விழுக்காட்டினர் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் பெண் குழந்தைகள்தான் அதிகம்.
“10 ஆயிரம் பெண் குழ்ந்தைக ளில் அசுத்தமான காற்றால் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை 9.6 விழுக்காடாக உள்ளது,” என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்றும், இதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக் கிறது.
“அரசு மேற்கொள்ளும் சுற்றுச் சூழல் மாசு தடுப்பு நடவடிக்கைகள் பலவும் மகிழ்ச்சி தரவில்லை. இச் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் விளைவுகள் மேலும் மோசமடையும்,” என மூத்த அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட தாக ஊடகச்செய்தி ஒன்று தெரி விக்கிறது.