ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாநில அமைச்சரவையில் ஐந்த துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. அவரது கட்சி இந்திய நாடாளுமன்றத்தில் 25 இடங்களைக் கைப்பற்றியது.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்டோர் துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளனர். இவர்களது பதவியேற்பு நாளை நடைபெறும்.