லாரி, பேருந்து மோதல்: 11 பேர் பலி

லாரி, பேருந்து மோதல்: 11 பேர் பலி

1 mins read

ராஞ்சி: லாரி மீது சிறிய ரகப் பேருந்து மோதிய விபத்தில 11 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அருகே நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை

யில் அந்தச் சிறிய பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே மிக வேகமாக வந்த லாரி மோதியதாகத் தெரிகிறது. பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் அந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலிசார் கருதுகின்றனர்.