அமராவதி: மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திருப்பதை அடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுடன் நெருக்கம் பாராட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு 74 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் திருப்பதி வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. அங்கு இருவரும் 15 நிமிடங்கள் உரையாடினர்.
பின்னர் திருப்பதி கிளம்பிய பிரதமருடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் சென்றார். பிரதமருடனான சந்திப்பின் போது ஆந்திர மாநில நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
மத்திய அரசுடன் கூடுமானவரை இணக்க மான போக்கை கடை பிடித்தால் மட்டுமே மாநிலத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து ஜெகன்மோகன் பக்குவமாக செயல்படுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.