காந்திநகர்: கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலின் தாக்கம் அதிகமாகியதால், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், காய்ச்சலின் தீவிரம் குறையாத நிலையில், அவருக்கு நிபா வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.