காந்திநகர்: சுமார் 135 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் தாக்க வரும் வாயு புயலுக்காக ஒட்டுமொத்த குஜராத்தும் பீதி யுடன் காத்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புய லாக உருவெடுத்துள்ளது. கடந்த இரு தினங்களில் புயல் சின்னம் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி, வாயு புயல் கோவாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், அது மேலும் தீவிரமடைந்து குஜராத் மாநிலத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று மாலைக்குள் குஜராத் தில் உள்ள போர்பந்தர் மற்றும் மகுவா கடற்கரை இடையே வாயு புயல் கரையைக் கடக்கும்போது குஜராத்தின் பெரும்பாலான பகுதி களில் மழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 7 மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. புயலை எதிர்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள் ளனர். மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டதால் 4 ஆயிரம் மீன்பிடி படகு கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட் டுள்ளன. 9 மாவட்டங்களிலுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர். மொத்தம் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் தங்குவதற்கு ஆயிரம் நிவாரண முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.