கோல்கத்தா: பாஜக தொண்டர்கள் மீது கோல்கத்தா போலிசார் மீண்டும் தடியடி நடத்தியதுடன் தண்ணீரும் பீய்ச்சி அடித்ததில் பலர் காயமடைந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகும் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அண்மையில் பாஜக தொண்டர்கள் மூவர் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று கோல்கத்தாவில் பாஜகவினர் போலிஸ் தடையை மீறி பேரணியாகச் சென்றதை அடுத்து தடியடி நடத்தப்பட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.