லக்னோ: தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கு இனி நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். உலக காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை காண் பதற்கு உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வரும் அனைவருக்கும் இனி மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த திடீர் முடிவு சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் அனைவரும் உலக அதிசயத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.