திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமாக பதிவிட்டவர்கள் மீது அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மொத்தம் 119 பேர் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர்களுள் அரசு ஊழியர்கள் சிலரும் அடங்குவர். இதே போல் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவாகி இருந்ததாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.