இடாநகர்: அண்மையில் மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மலையேற்றத்தில் பயிற்சி பெற்ற பத்து பேர் கொண்ட குழு விபத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடுவதுடன் யாரேனும் உயிருடன் உள்ளனரா என்பதை இக்குழுவினர் கண்டறிய உள்ளனர்.