புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் இனி தங்கள் வீடுகளில் இருந்த படியே அரசுப் பணிகளைக் கவனிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாறாக, அனைத்து அமைச்சர் களும் இனி சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் பிரதமராகப் பொறுப் பேற்றுள்ள நரேந்திர மோடி தமது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங் களை மேற்கொள்ளத் துவங்கி உள்ளார். கடந்த வாரம் மாலத்தீவு, இலங்கைக்குப் பயணம் மேற் கொண்ட இப்போது கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச் சரவைக் கூட்டம் நேற்று முன் தினம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப் போது அமைச்சர்கள் பலர் தங் களது அமைச்சு அடுத்தடுத்து மேற்கொள்ள இருக்கும் திட்டங் கள், பணிகள் குறித்து விவரித்த னர். மேலும் முதற்கட்ட இலக்கு கள் குறித்தும் தெரிவித்தனர்.
இதையடுத்து அடுத்த நூறு தினங்களில் ஒவ்வொரு அமைச் சும் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் மத்தியில் பேசிய அவர், தினமும் அமைச்சு அலுவலகத்துக்கு வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிக ளுடன் விவாதிக்க வேண்டும் என அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.
“வீட்டிலிருந்து பணி செய் வதைத் தவிர்க்கவும். முக்கிய திட்டங்கள் குறித்து இணையமைச் சர்களுடன் விவாதிக்க வேண் டும். முக்கிய ஆவணங்களை அவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். துணையமைச்சர்க ளுடன் விவாதித்த பிறகே எதை யும் அமைச்சரவைக்கு பரிந்து ரைக்க வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.
மேலும், அமைச்சர்கள் தங்க ளது தொகுதி மக்களை அவ்வப் போது சந்திக்க வேண்டும் என் றும், மக்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்திய பிரதமர் மோடி, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்களும் பொதுமக்களுட னான சந்திப்புகளைத் தொடர வேண்டும் என்றார்.
இதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்குகளை ஒவ்வொரு அமைச்சும் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்ட பிரதமர், முதல் 100 நாட்களில் விரைவாகச் செயல்படுத்தவுள்ள திட்டங்களின் பட்டியலை அனுப்பு மாறும் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.