வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி, பிரம் மாண்ட மேம்பாடுகளைக் கண்டு வருகிறது. அந்த நகரின் போக்கு வரத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கம்பி வண்டிச் சேவை விரைவில் நடப்புக்கு வரும் என்று தெரிகிறது.
இந்துக்களின் புனித நகராகக் கருதப்படும் வாரணாசியில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்ப தற்குப் பதிலாக கம்பி வண்டிச் சேவையை நடப்புக்குக் கொண்டு வரலாம் என்று அந்த மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வாரணாசி வீதிகளில் பல வகையான போக்குவரத்துகள் நடப்பில் இருக்கின்றன. போக்கு வரத்துத் தேக்கம் அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
கம்பி வண்டித் திட்டத்திற்கு அரசாங்க அனுமதி கிடைக்கும் என்றால் இரண்டே ஆண்டுகளில் அந்த நகரில் பல திசைகளிலும் கம்பி வண்டிகள் சேவையைக் காண முடியும்.
இந்தியாவின் மேற்குப்புற நகர் கள் சிலவற்றில் கம்பி வண்டிச் சேவை இப்போது நடப்பில் இருக் கிறது. பல சுற்றுலா இடங்களிலும் அந்தச் சேவை கிடைக்கிறது.
ஆனால் முழுமையான போக்கு வரத்துச் சேவையாக கம்பி வண்டிச் சேவை பெரும் நகர்களில் இதுவரையில் இல்லை.
மலைப்பாங்கான இடங்களில் அமைந்திருக்கும் நகர்களும் சிறு நகர்களும் கம்பி வண்டிச் சேவையை நடத்துவது பற்றி பரி சீலிக்கலாம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அண்மையில் ஆலோசனை தெரிவித்தார்.
வாரணாசி மேம்பாட்டு ஆணை யம் கம்பி வண்டிச் சேவை தொடர் பில் 2018 பிப்ரவரியில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங் களுடன் ஆலோசனை நடத்தியது.
ஒரு கம்பி வண்டியில் 80 பேர் வரை செல்லலாம் என்றும் தொலை வைப் பொறுத்து 1 மணி நேரத்தில் 12,000 பேரைச் சுமந்து செல்லும் ஆற்றல் அதற்கு உண்டு என்றும் ஆஸ்திரிய நிறுவனங்கள் தெரி வித்து இருக்கின்றன.