கர்நாடகாவில் ராமநகரா மாவட்டம் கொடி கெஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா என்பவர் உணவகம் நடத்துவதற்காக பலரிடம் 12 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போனதால் அவர் தலைமறைவானார்.
என்றாலும் ஊர்மக்களில் சிலர் அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்து வலுக்கட்டாய மாக அழைத்துவந்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் போலிஸ் ஏழு பேரைக் கைது செய்துள்ளது. படம்: இந்திய ஊடகம்