கிர்கிஸ்தான்: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமை யான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக்கில் நடக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று உரையாற்றிய திரு மோடி, இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இந்திய மண்ணில் பயங்கர வாதத்தை அரங்கேற்ற பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. பயங் கரவாதம் இல்லாத சூழ்நிலையில் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்த முடியும். இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்க பாகிஸ்தான் இதுவரையில் உருப் படியான காரியம் எதையுமே செய்ய வில்லை என்று வியாழக்கிழமை சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த போது அவரிடம் திரு மோடி எடுத்துக் கூறி இருந்தார்.
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.
அந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொண்டார். இரு தலைவர்களும் கிர்கிஸ்தான் அதிபர் அளித்த விருந்தில் வியாழக்கிழமை கலந்து கொண்டார்கள். என்றாலும் இம் ரான்கானைச் சந்திக்காமல் திரு மோடி அவரைத் தவிர்த்துக் கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இதனிடையே, வியாழக்கிழமை இந்தியப் பிரதமருடன் பேச்சு நடத்திய பிறகு பேட்டி அளித்த சீன அதிபர், இந்தியா, சீனா உறவு மேம்பட வேண்டும் என்றும் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகை யில் இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட சீனா ஆயத்தமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிலிருந்து செயல் படும் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு மன்றம் அண்மையில் அறிவித்தது. அத்தகைய அறிவிப்பு வெளியாக முட்டுக்கட்டை போட்டு வந்த சீனா, கடந்த மாதம் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டது.
இதற்குப் பிறகு வியாழக்கிழமை சீன அதிபரை முதல் தடவையாக பிரதமர் மோடி சந்தித்தார்.
அதோடு, இந்தியாவில் நடந்த தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி யைப் பெற்று இரண்டாவது தடவை யாக திரு மோடி பிரதமராகிய பிறகு இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்த முதல் சந்திப் பாகவும் அது இருந்தது.