அனல்காற்று, நோய்: கொத்து கொத்தாக மடியும் குழந்தைகள்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பரவி வரும் மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிவிட்டன. இவர்களில் 55 குழந்தைகள் முஸாஃபர்

பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாண்டனர். இந்த மருத்துவனையில் 44 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை எட்டு குழந்தைகளும் நேற்று பிற்பகல் வரை மூன்று குழந்தைகளும் மாண்டதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்கே ஷாஹி கூறினார்.

மூளைக்காய்ச்சல் வேமாகப் பரவுவதற்கு பீகார் மாநிலம் முழுவதும் காணப்படும் உச்சக்கட்ட வெப்பநிலை முக்கிய காரணம் என்றார் அவர்.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலின் வெப்பம் தாங்காமல் நேற்று முன்தினம் மட்டும் பீகாரில் 40 பேர் உயிரிழந்துவிட்டனர். அவுரங்காபாத் மாவட்டம்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வீசும் அனல்காற்றுக்கு 27 பேர் பலியானார்கள்.

வெப்பத்தால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அவுரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றார். இதற்கிடையே, வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!