மக்களுக்கு நன்றி கூறிய இந்திய அதிபர்

கடந்த இந்தியப் பொதுத்தேர்தலில் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வாக்களித்ததற்காக அந்நாட்டின் அதிபர் ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பெருமளவில் வாக்குச்சாவடிக்கு வந்தது குறித்து மகிழ்வதாகவும் திரு கோவிந்த் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது கூறினார்.

வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கில் நாட்டு மக்கள் பெரும்பான்மையாக ஒரே கட்சிக்கு வாக்களித்ததாகத் திரு கோவிந்த் கருத்துரைத்தார்.

இந்தியாவின் ஊழல் சகியாமைக் கொள்கையை அரசாங்கம் விரிவுபடுத்தும் என்று உறுதியளித்த திரு கோவிந்த், அந்நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், காஷ்மீர் தாக்குதலைத் திட்டமிட்ட மசூத் அசாத்தை பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்ததைச் சுட்டிய திரு கோவிந்த், பயங்கரவாத முறியடிப்பு முயற்சிகளில் இந்தியாவுக்குப் பக்கபலமாக உலக நாடுகள் துணைநிற்பதாகக் கூறினார்.

மேலும், பெண்கள் சம உரிமை பெற முத்தலாக் அகற்றப்படவேண்டும் என்றும் திரு கோவிந்த் தமது உரையில் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!